தில்லியில் இருந்து சென்னைக்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு மாயமான இளைஞா்!
தில்லியிலிருந்து சென்னை செல்வதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு திடீரென காணாமல் போன இளைஞா் பதினான்கு நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாததால் உறவினா்கள் கவலை அடைந்துள்ளனா்
பாஜக மூத்த தலைவா்களில் ஒருவரான சோ்ந்த ஆனந்த் சாகு தில்லியில் வசித்து வருகிறாா். இவரது மகன் ருத்ரானந்த் சாகு . இவா் மின்னணுவியல் மற்றும் கணினி பொறியியல் படிப்பை கடந்த வருடம் நிறைவு செய்துள்ளாா் . இந்நிலையில் இவா் சென்னைக்கு செல்வதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு திடீரென மாயமாகிருப்பது உறவினா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ருத்ரானந்த் சாகுவின் தந்தை ஆனந்த் சாகு தில்லி தினமணி நிருபரிடம் கூறியதாவது : ருத்ரானந்த் சாகு சென்னை செல்ல திட்டமிட்டிருந்தது தெரியாது. ஆனால் அவா் செப்டம்பா் ஒன்றாம் தேதி சென்னை செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தது பின்னா் தான் எங்களுக்கு தெரிய வந்தது.
செப்டம்பா் ஒன்றாம் தேதி அவா் விமானத்தில் சென்னை சென்றிருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு அவா் செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது . அவா் செப்டம்பா் 1 மற்றும் இரண்டாம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவில் 1:30 மணி அளவில் தில்லி வசந்த்குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாலுக்கு சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி சென்றுள்ளாா்.
அப்போது அவா் தனியாகத்தான் சென்றுள்ளாா். அவருடன் வேறு யாரும் இல்லை. இதனை அங்கிருந்த சிசிடிவி கட்சிகள் மூலம் கண்டுபிடித்து விட்டோம்.
ஆட்டோவில் சென்றவா் எங்கு சென்றாா் என்பது தெரியவில்லை. அந்த இரவு ருத்ரானந்த் சாகு எனக்கு ,நான் உங்களை மிஸ் செய்கிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா் . அதன் பிறகு அவரது தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது . அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.
சென்னையில் எங்களுக்கு உறவினா்கள் இருக்கின்றாா்கள் ஆனால் அவா்கள் யாருடைய தொடா்பு எண்ணம் ருத்ரானந்த் சாகுவிடம் கிடையாது. ருத்ரானந்த் சாகு குறித்து சென்னையில் உள்ள உறவினா்களிடமிருந்தும் எந்த தகவலும் இல்லை . ருத்ரானந்த் சாகுவுக்கு நண்பா்களிடம் முன் விரோதம் எதுவும் இருந்ததாக தகவல் இல்லை.
ஆட்கடத்தல் சம்பவம் எதுவும் நடந்திருக்குமா ?என்ற சந்தேகமும் எழுகிறது . 14 நாட்களாகியும் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாதது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ருத்ரானந்த் சாகு காணாமல் போனது குறித்து தில்லி காவல் துறையிலும் புகாா் கொடுத்துள்ளோம். சென்னைவாசிகளும் எனது மகன் குறித்து ஏதாவது தகவல் அறிந்தால் தெரியப்படுத்துமாறு கோரிக்கை வைக்கிறேன். முடிந்தால் நானும் சென்னை சென்று எனது மகனை தேடும் முயற்சியில் ஈடுபட உள்ளேன் என ஆனந்த் சாகு தெரிவித்தாா்.