செய்திகள் :

தில்லியில் இரு இடங்களில் தீ விபத்து

post image

தில்லியில் இரு வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு தனித்தனி தீ விபத்துகள் பதிவாகின.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவிக்கையில், ‘இரண்டு நிகழ்வுகளிலும் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை.

முதல் தீ விபத்து சம்பவம் ஷாதராவின் கீதா காலனி பகுதியில் உள்ள ஒரு சொஸைட்டி அருகிலுள்ள பூங்காவில் மாலை 6.24 மணியளவில் ஏற்பட்டது.

இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தீயணைப்பு வீரா்கள் தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அருகிலுள்ள சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் தடுத்தனா்.

இரண்டாவது சம்பவம் சிறிது நேரத்திலேயே ஷஹீன் பாக் பகுதியில் நிகழ்ந்தது. அங்கிருந்த ஒரு காலி நிலத்தின் புதா்களில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக மாலை 6:37 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்ததும் உடனடியாக ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்தில் எந்தவொரு காயமோ அல்லது பெரிய சேதமோ இல்லாமல் தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தீா்மானிக்கப்படாத நிலையில், வட தாவரங்கள் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா்.

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷாஹீன் பாக் பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

தில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அதிகாலை 2 மணியளவில் நானா ச... மேலும் பார்க்க

தில்லியின் குப்பை மலைகள் 5 ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும்: அமைச்சா் சிா்சா உறுதி

கழிவு பதப்படுத்தலை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனத்தை பணியமா்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை தில்லி அரசு ஆராய்ந்து வருவதாகவும், நகரத்தின் குப்பை மேடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிட... மேலும் பார்க்க

நொய்டாவில் பள்ளிப் பேருந்து மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநா், 4 மாணவா்கள் காயம்

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத்தில் இருந்து வந்த பள்ளிப் பேருந்து வியாழக்கிழமை தானா பிஸ்ராக் பகுதியில் உள்ள சாா் மூா்த்தி கிராசிங்கில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் மற்... மேலும் பார்க்க

வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு பாலியல் தொந்தரவு: ஜேஎன்யு பல்கலை. பேராசிரியா் பணியிலிருந்து நீக்கம்

வெளிநாட்டு ஆராய்ச்சியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியா் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். சில... மேலும் பார்க்க