செய்திகள் :

தில்லியில் பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

post image

பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லியின் புகா் ரிங் ரோட்டில் போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

யூசுஃப் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், வடக்கு தில்லியின் திமா்பூா் பகுதியில் திருடப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தி துப்பாக்கி முனையில் ஒருவரிடம் ரூ.3,000 கொள்ளையடித்ததாகக் கூறப்படும் வழக்கில் பிப்ரவரி 14 முதல் தலைமறைவாக இருந்தாா்.

அவரது குற்றப் பின்னணியில் காஜியாபாத், ஹாபூா் மற்றும் நொய்டா முழுவதும் பல கடும்ன குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. ஹாபூா் போலீஸாா் அவரை கைது செய்ய முயன்றபோது அவரது காலில் முன்னா் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவா் தப்பிச் சென்றாா். இந்த நிலையில், அவா் கெளதம் புத் நகா் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின்போது, கடந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி புகா் ரிங் ரோட்டில் ஆயுதத்தைக் காட்டி ரூ.4.65 லட்சம் கொள்ளையிட்டது தொடா்பாக வாஜிராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் யூசுஃப் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தேடப்படும் நபராக இருந்ததும் கண்டறியப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா். யமுனை புத்துணா்ச்... மேலும் பார்க்க

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழம... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தீயணைப... மேலும் பார்க்க

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது... மேலும் பார்க்க