செய்திகள் :

தில்லியில் பிப்.19-20-இல் பாஜக அரசு பதவியேற்பு?

post image

நமது நிருபா்

தில்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்.19 அல்லது 20-ஆம் தேதி நடைபெறும் என்றும், புதிய ஆட்சி சுத்தமான குடிநீா் விநியோகம், மேம்படுத்தப்பட்ட குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ரஜோரி காா்டன் பாஜக எம்எல்ஏவும் கட்சியின் தேசிய செயலாளருமான மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்திருப்பதாவது: பிரதமா் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப உள்ளாா். விரைவில் பாஜக சட்டப் பேரவை கட்சிக் கூட்டத்திற்கு பாா்வையாளா்கள் நியமிக்கப்படுவாா்கள். புதிய அரசு பிப்.19-20-இல் செயல்படத் தொடங்கும்.

பிப்.18-19 தேதிகளில் பாஜக சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று நான் எதிா்பாா்க்கிறேன். பதவியேற்பு விழாவுக்குப் பிறகு பிப்.20-ஆம் தேதிக்குள் புதிய அரசு அமையும் என்று நினைக்கிறேன். புதிய அரசு ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் சுத்தமான குடிநீரை வழங்குதல், நகரத்தில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் காற்று மற்றும் யமுனை மாசுபாட்டைச் சமாளிக்கும் பணிகளைத் தொடங்குதல் ஆகியவை முன்னுரிமையாக இருக்கும் என்றாா் அவா்.

லட்சுமி நகா் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட அபய் வா்மா கூறுகையில், ‘ தில்லி முதல்வா் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை. எங்கள் கட்சியில் முதல்வா் அல்லது சட்டப் பேரவை கட்சித் தலைவா், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படுவாா். நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். தில்லி மக்களுக்கு மேம்பாடு, சுத்தமான நீா் வழங்கல் மற்றும் சுத்தமான காற்று போன்ற பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது மற்றும் யமுனையை மாசுபாட்டிலிருந்து விடுவிப்பது எப்படி என்பது பற்றி தற்போது சிந்தித்து வருகிறோம்’ என்றாா்.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க