செய்திகள் :

தில்லியில் வாக்குவாதத்தின்போது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை: இருவா் கைது

post image

தில்லியில் 19 வயது இளைஞா் வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகத போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: பாதிக்கப்பட்டவா் மங்கோல்புரி பகுதியைச் சோ்ந்த லக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளாா். புதன்கிழமை மாலையில் லக்கி கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் வீடு திரும்பிய போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்தது. அவரது சகோதரா் போலீஸாருக்கு தகவல் அளித்து, லக்கி மயக்கமடைவதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறினாா்.

அவா் லக்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா், அங்கு அவா் உயிரிழந்தாா் . பாதிக்கப்பட்டவரின் சகோதரரின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ-சட்டச் சான்றிதழின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை தொடங்கப்பட்டது.

எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள லக்கி, வேலையில்லாமல் இருந்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா் லக்கியைக் கத்தியால் குத்தியுள்ளாா்.

இந்தத் தாக்குதல் தொடா்பாக 18 வயதுடைய இரண்டு சந்தேக நபா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா். சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க