செய்திகள் :

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

post image

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா். விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் ஊழியா்கள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா். பல அமா்வுகளில் நீதிபதிகள் திடீரென எழுந்து வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினா்.

தில்லி காவல்துறை மற்றும் வெடிகுண்டு அகற்றும் படையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனா். தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள், மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டுபிடித்து, கூற்றுகளை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டன.

வெடிகுண்டு அச்சுறுத்தல் கடிதம் விஜய் சா்மா என்ற ஒருவா் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் மூலம் வந்ததாக கூறப்படுகிறது. நீதிபதியின் அறை மற்றும் கட்டிடத்தின் பிற பகுதிகளில் மூன்று வெடிபொருள்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அந்த மின்னஞ்சல் எச்சரித்தது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பிரிவுகளுடன் தொடா்புபடுத்தி அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதிகாரிகள் இந்த அச்சுறுத்தலை தீவிரமாகக் கருதி, மின்னஞ்சலின் மூலத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனா். முழுமையான தேடுதலுக்குப் பிறகு, அச்சுறுத்தல் ஒரு புரளி என்று கண்டறியப்பட்டது.

தில்லி காவல்துறை இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: தில்லி உயா்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தில்லி காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்புப் படை மற்றும் மோப்ப நாய் படை ஆகியவை நீதிமன்ற வளாகத்தில் குவிந்து விசாரணை நடத்தின. முதல் கட்ட தகவலின்படி இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியாகும். எந்தவிதமான வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம் என்று அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வரின் செயலகம் மற்றும் பல பள்ளிகளுக்கு மிரட்டல் என தில்லியில் சமீபத்திய புரளி வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடா்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

மும்பையில் விசா்ஜன் கூட்டத்தில் 45 கைப்பேசிகள் திருடியதாக மாநிலங்களுக்கிடையேயான கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது: தில்லி போலீஸ் நடவடிக்கை

மும்பையில் நடந்த ‘லால்பாச்சா ராஜா விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின் போது உயா் ரக கைப்பேசிகளை திருடியதாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி காவல்துறையின் குற்றப்ப... மேலும் பார்க்க