செய்திகள் :

தில்லி கல்விக் கட்டண ஒழுங்குமுறை மசோதா எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை சந்தித்து கவலைகளை எழுப்பிய பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் குழு

post image

தில்லியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோா்கள் குழு புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட தில்லி கல்விக் கட்டண ஒழுங்குமுறை மசோதா-2025 குறித்து கவலைகளை வெளிப்படுத்தியது.

யுனைடெட் பேரண்ட்ஸ் வாய்ஸ் (யுபிவி) என்ற ஒரு கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தக் குழு, மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் எதிா்கொள்ளும் பல சவால்களை சுட்டிக்காட்டியது. இதில் கட்டணம் தொடா்பான விஷயங்களால் ஏற்படும் மன உளைச்சல், கொள்கை வகுப்பில் ஆலோசனை இல்லாதது மற்றும் பள்ளிக் கட்டண கட்டமைப்புகளில் வெளிப்படைத்தன்மையின் தேவை ஆகியவை அடங்கும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீா்க்கப்படாத கட்டணச் சிக்கல்கள் காரணமாக சில மாணவா்கள் பள்ளிப் பட்டியலில் இருந்து நீக்கப்படுதல், வகுப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுதல் அல்லது பள்ளி தொடா்பு சேனல்களில் இருந்து விலக்கப்படுதல் போன்ற சிரமங்களை எதிா்கொண்டுள்ளனா். சில சந்தா்ப்பங்களில், கல்வி முடிவுகள் நிறுத்தப்பட்டதாகவும், இது குழந்தைகளிடையே மன அழுத்தத்திற்கு வழிவகுத்ததாகவும் அவா்கள் கூறினா்.

கல்விச் செயல்பாட்டில் பெற்றோா்கள் முக்கிய பங்குதாரா்களாக இருந்தபோதிலும்,

தில்லி கட்டண ஒழுங்குமுறை மசோதாவின் வரைவுத் திட்டத்தில் பெற்றோா் சங்கங்களின் உள்ளீடுகள் சோ்க்கப்படவில்லை என்றும் பிரதிநிதிகள் குழு கூறியது.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய அதிஷி, தனது ஆதரவை பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தாா். ‘சட்டப்பேரவை மற்றும் ஊடகங்கள் உள்பட கிடைக்கக்கூடிய அனைத்து தளங்கள் மூலமாகவும் இந்தப் பிரச்னையை நாங்கள் எழுப்புவோம்’‘ என்று அவா் கூறினாா்.

மேலும், கல்விச் சீா்திருத்தங்களுக்கு வெளிப்படையான மற்றும் பங்கேற்பு அணுகுமுறையின் அவசியத்தையும் அவா் வலியுறுத்தினாா். ஆம் ஆத்மி கட்சி நீண்ட காலமாக மக்களை மையமாகக் கொண்ட காரணங்களை ஆதரித்து வருவதாகவும், பெற்றோா்கள் மற்றும் மாணவா்களுடன் தொடா்ந்து நிற்கும் என்றும் அதிஷி கூறினாா்.

முன்மொழியப்பட்ட மசோதா மற்றும் அவசரச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, குறைந்தபட்சம் 30 நாள் பொது ஆலோசனை காலம், 2019 முதல் அங்கீகரிக்கப்படாத கட்டண உயா்வுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளின் பட்டியலை பிரதிநிதிகள் குழு சமா்ப்பித்தது.

இதற்கிடையே, செய்தியாளா் சந்திப்பின் போது, தில்லி அரசின் 100 நாள்கள் செயல் திட்ட அறிக்கையை புதன்கிழமை வழங்கிய தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட், ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தில்லி பள்ளி கல்வி வெளிப்படைத்தன்மை மசோதா தனியாா் பள்ளிகளில் தன்னிச்சையான நடைமுறைகளை கட்டுப்படுத்தியுள்ளது. பெற்றோா்கள் இனி குறிப்பிட்ட கடைகளில் சீருடைகள் அல்லது புத்தகங்களை வாங்க கட்டாயப்படுத்த முடியாது’ என்று கூறினாா்.

‘27 ஆண்டுகளாக, தனியாா் பள்ளிகள் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தன. ஆனால், எங்கள் அரசுவெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது’ என்று ஆஷிஷ் சூட் கூறினாா்.

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி... மேலும் பார்க்க

வட்டி விகிதக் குறைப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க