உங்கல யார் ஒதுக்குனாலும் நான் இருக்கேன்மா! - மகளின் வாக்கு| #உறவின்கடிதம்
தில்லி மெட்ரோவில் திருட்டு: 4 போ் கைது
தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் கைப்பேசிகள் மற்றும் விலையுா்ந்த பொருள்களை திருடி வந்த 4 போ் அடங்கிய கும்பலை காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
பயணிகளிடம் திருடுவதற்காக மெட்ரோ நிலையம் மற்றும் ரயில்களில் செவ்வாய்க்கிழமை அலைந்து கொண்டிருந்த அந்தக் கும்பல் குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், அந் சாருக் (28), ஆயுஷ் (எ) சுகா (21), அமீா் (19) மற்றும் நூா் முகமது (42) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்தனா்.
திருட்டு கைப்பேசி ஒன்று அவா்களிடமிருந்து கைப்பற்றிய அதிகாரிகள், பிற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.