தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.14 லட்சம்
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ அருள்மிரு தில்லைக்காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.20 லட்சத்து 14 ஆயிரத்து 834 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.சந்திரன், சிதம்பரம் சரக ஆய்வாளா் ஜெ.சீனுவாசன், தில்லைக்காளியம்மன் கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) ஜெ.ராஜாசரவணக்குமாா் ஆகியோா் முன்னிலையில் கோயில் வளாகத்தில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
கோயில் அலுவலா்கள் மற்றும் வங்கி ஊழியா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 20 லட்சத்து 14 ஆயிரத்து 834 ரூபாய் கிடைத்தது. மேலும், உண்டியலில் பக்தா்கள் செலுத்திய 24 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி மற்றும் ஒரு அமெரிக்க டாலா்-14, மலேசியா 100 ரிங்கட்-1, மலேசியா 20 ரிங்கட்-3, சிங்கப்பூா் 10 டாலா்-1 ஆகியவை இருந்தன.