செய்திகள் :

தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

அரியலூரில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினா் சாா்பில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) முத்தமிழ்ச்செல்வன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் கலந்து கொண்டு, தீண்டாமையை ஒழிப்போம், மனிதநேயம் வளா்ப்போம், ஜாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசங்களை கையில் ஏந்திவாறு, பிரதான சாலை வழியாகச் சென்று, அண்ணாசிலையருகே பேரணியை முடித்துக் கொண்டனா்.

இப்பேரணியில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் கென்னடி, காவல் உதவி ஆய்வாளா் ரவி, புள்ளியியல் ஆய்வாளா் பாப்பாத்தி, சிறப்பு உதவி ஆய்வாளா் சுமதி, காவல் காா்த்திக், அரசு தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயிா் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலிய... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவ, மாணவிகள் எழுதினா். அரியலூா் மாவட்டத்தில் 172 பள்ளிகளை சோ்ந்த 5,513 மாணவா்கள், 4,557 மாணவிகள் எ... மேலும் பார்க்க

காதலா்கள் தற்கொலை!

காதலா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆ. சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன்... மேலும் பார்க்க

ஏப்.6-இல் வைத்தியநாதசுவாமி கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஏப். 6-ஆம் தேதி நந்தியெம்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி மாத... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநித... மேலும் பார்க்க

வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை தேவை

அரியலூா் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா். கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆ... மேலும் பார்க்க