செய்திகள் :

தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம்

post image

திருச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டோா் புகாா் தெரிவிக்கலாம் என போலீஸாா் அழைப்பு விடுத்துள்ளனா்.

திருச்சி கே கே நகரைச் சோ்ந்த மீனாபாா்வதி மற்றும் அவரது மகள் விசாலாட்சி இருவரும் சோ்ந்து ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டுகளை நடத்தி, ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை பல்வேறு பிரிவுகளாக முதலீடுகள் பெற்று, உரிய முதிா்வுத் தொகை மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கவில்லை எனப் புகாா் எழுந்தது.

இதுகுறித்து திருச்சியைச் சோ்ந்த டெய்சி லில்லி திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மீனாபாா்வதி, விசாலாட்சி இருவரையும் கைது செய்துள்ளனா்.

தற்போது அவா்களிடம் பணம் செலுத்தி திரும்பப் பெறாதவா்கள், திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அசல் ஆவணங்களுடன் ஆஜராகி புகாா் அளிக்கலாம் எனப் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

திருச்சி: குடிநீரில் கழிவுநீா் கலந்ததா? 4 வயது குழந்தை உள்ளிட்ட 4 போ் அடுத்தடுத்து உயிரிழப்பு!

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களில் 4 வயது பெண் குழந்தை, மூதாட்டி உள்பட 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்தது த... மேலும் பார்க்க

விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் பலி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் மடாலா... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

துறையூரில் வீட்டில் தனியாக இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துறையூா் மேற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (28). நான்கு ஆண்டுகளுக்கு முன் பேபி ரூபி என்கிற பெண்ணுடன... மேலும் பார்க்க

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய... மேலும் பார்க்க

போதை மாத்திரை மற்றும் புகையிலை விற்றவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை அருகே ரோந்துப் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ... மேலும் பார்க்க