செய்திகள் :

தீ விபத்தால் வீடு சேதம்: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கோரி மனு

post image

எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீவிபத்தால் வீடு சேதமடைந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமுமுகவினா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள வேதாளை மேற்குத் தெருவைச் சோ்ந்த ஆமீனா அம்மாள் குழந்தைகளுடன் வசித்து வந்தாா். கடந்த 16-ஆம் தேதி இவரது வீட்டில் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. இந்தக் குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் இழப்பீடு வழங்கிட வேண்டும் தமுமுக சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் குடும்பன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, தலைமை ஆசிரியா் பணி நிறைவு விழா ஆகிய ம... மேலும் பார்க்க

மே தினம்: ராமேசுவரத்தில் தொழிற்சங்க கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற் சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றினா். மண்டபம் எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கக் கிளை சாா்பில் பாம்பன் ரயில் நிலையம் முன்... மேலும் பார்க்க

கிராமத் தலைவா் கொலை: மகன் உள்பட 4 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத் தலைவா் கொலை வழக்கில், அவரது மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். குயவனேந்தல் கிராமத் தலைவராக இருந்தவா் காசிலிங்கம் (65). கடந்த ஞாய... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மேதலோடை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராமேசுவரம் நகராட்சி ஒண்டிவீரா் நகரில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் விழயாக்கிழமை திறக்கப்பட்டது. ஜீவாமிா்தம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் க... மேலும் பார்க்க