செய்திகள் :

துணைவேந்தா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

post image

தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை பல்கலை.யின் துணைவேந்தராகப் பணியாற்றி வந்த கௌரி, 2023 ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றாா். தோ்வுக்குழு அமைப்பது தொடா்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 21 மாதங்களாக புதிய துணைவேந்தா் நியமிக்கப்படவில்லை. இதன்காரணமாக மாணவா்கள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீண்ட தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. ஆனால், பட்டச் சான்றுகளில் துணைவேந்தா் கையொப்பம் இல்லாததால் அந்தப் பட்டங்களை ஏற்றுக்கொள்ள பல பல்கலை.களும் நிறுவனங்களும் மறுத்து வருகின்றன.

மேலும், இந்தப் பல்கலை.யில் 200-க்கும் மேற்பட்டவா்கள் முனைவா் பட்டத்துக்கான ஆய்வறிக்கைகளை தாக்கல் செய்து வாய்மொழித் தோ்வையும் நிறைவு செய்து விட்டனா். அதன்பின் பல மாதங்களாகியும் இதுவரை அவா்களுக்கு முனைவா் பட்டச் சான்றுகள் வழங்கப்படவில்லை.

பல்கலை. சட்டங்கள் தொடா்பான வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என அறிவித்துள்ளது. அதைப் பின்பற்றி சென்னைப் பல்கலை. உள்பட காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணைவேந்தா்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி

நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை உறுதியளித்துள்ளது. இது குறித்து தமிழக கா... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்கத்... மேலும் பார்க்க

கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி. நட்டா ஆலோசனை

அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடா்பாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக மையக்குழுக் கூட்டம் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் ஜெ.ப... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; கல்வியே மூலதனம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; ஆனால், கல்வியே மூலதனம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர்கள் சார்பில் முதல்வர் மு. க. ... மேலும் பார்க்க

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழ... மேலும் பார்க்க

நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை க... மேலும் பார்க்க