செய்திகள் :

துருக்கி ஆப்பிள்களை மக்களும் புறக்கணிக்கின்றனரா?

post image

துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை என பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஆப்பிள்களை புறக்கணிக்க வியாபாரிகள் முடிவு செய்த நிலையில், தற்போது மக்களும் துருக்கி ஆப்பிள்களை விரும்பி வாங்குவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

காஷ்மீர், வாஷிங்டன் மற்றும் நியூசிலாந்தில் இருந்து வரும் ஆப்பிள்கள் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தலத்திலுள்ள பைசாரான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம், 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்பதால், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

இச்சம்பவத்தில் பலரும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.

இதனால், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுடனான தொடர்பை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். சமீபத்தில் அந்நாடுகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுலாப் பயணங்களையும் ஏராளமான இந்தியர்கள் ரத்து செய்தனர்.

இதனிடயே துருக்கி ஆப்பிள் வருகை குறித்து பேசிய பழ வியாபாரி ஒருவர்,

''ஆப்பிள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், துருக்கி ஆப்பிளை விற்க வேண்டாம் என்றே கூறுகின்றனர். துருக்கி தவிர மற்ற எந்த நாட்டிலிருந்து வரும் ஆப்பிளாக இருந்தாலும் வாங்கத் தயார் என்கின்றனர். அதனால், தற்போது காஷ்மீர், வாஷிங்டன் மற்றும் நியூசிலாந்தில் இருந்து வரும் ஆப்பிள்கள் மட்டுமே உத்தரப் பிரதேசத்தில் விற்கப்படுகிறது'' எனக் குறிப்பிட்டார்.

துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை புறக்கணிப்பதாக உத்தரப் பிரதேச வியாபார்கள் சங்கம் சமீபத்தில் அறிவித்திருந்தது. தற்போது மக்களும் துருக்கி ஆப்பிள்களை விரும்புவதில்லை என்பதை வியாபாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க | அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு வெளியே காலணியை வைப்பதற்காக ரூ. 24,000 அபராதம் செலுத்திய நபர்!

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் காலணியை வைத்துக்கொள்வதற்காக இளைஞர் ஒருவர் அபராதம் செலுத்தி வருகிறார். ஒரு நாளுக்கு ரூ.100 வீதம் 8 மாதங்களுக்கு ரூ. 24,000 அபராதம் செலுத்தியுள்ளார். தற்போ... மேலும் பார்க்க

கோழிக்கோடு பேருந்து நிலைய கடையில் தீ விபத்து!

கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலைய துணிக் கடையில் இன்று (மே 18) மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டது. மாலை 5 மணியளவில் நேரிட்ட தீ விபத்தை சுமார் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்க வாழ் இந்தியர்களின் விசா ரத்தாகும் அபாயம்?

புது தில்லி: இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் தலைமைய... மேலும் பார்க்க

புதிய போப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்பது யார்?

புதிய போப் பதினான்காம் லியோ பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் நாலாகாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பாட்டனும் கலந்... மேலும் பார்க்க

சசி தரூரைச் சுற்றி நகரும் அரசியல்! கேரள காங். சொல்வதென்ன?

மத்திய அரசு நியமித்துள்ள எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இணைக்கப்பட்டுள்ளதில் காங்கிரஸ் தலைமைக்கு விருப்பமில்லையா? என்று தேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.வெளிநாடுகளுக்... மேலும் பார்க்க