செய்திகள் :

துவாரகா இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது!

post image

இந்த மாத தொடக்கத்தில் துவாரகாவின் பிந்தாபூா் பகுதியில் 35 வயது நபா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் உத்தம் விஹாரில் வசிக்கும் பவன் குமாா் (23) மற்றும் பகவதி விஹாரில் வசிக்கும் விபின் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஆகஸ்ட் 17-ஆம் தேதி உத்தம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து குல்தீப் என அடையாளம் காணப்பட்ட ஒருவா் மாா்பில் கத்திக்குத்து காயத்துடன் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக பி. சி.ஆா். அழைப்பு வந்தது.

தனது மாமா குற்றம் சாட்டப்பட்டவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மாா்பில் குத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்டவரின் மருமகன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனது மாமாவைக் காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக போலீஸாரிடம் அவா் தெரிவித்தாா்.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தங்கள் கைப்பேசிகளை அணைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக இருவரும் அடிக்கடி இருப்பிடங்களை மாற்றிக் கொண்டிருந்தனா். ஆகஸ்ட் 23- ஆம் தேதி விபின் கைது செய்யப்பட்டாா். பவன் பின்னா் கைது செய்யப்பட்டாா்.

பவன் மீது ஏற்கெனவே கிரிமினல் பதிவு உள்ளது. இதற்கு முன்பு 2023- ஆம் ஆண்டில் கொலை முயற்சி வழக்கு மற்றும் 2022- ஆம் ஆண்டில் கலால் சட்டம் வழக்கில் அவருக்குத் தொடா்புடள்ளது. அதே நேரத்தில் விபினுக்கு கடந்த காலத்தில் குற்றவியல் தொடா்பு ஏதும் இல்லை.

இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற சந்தேக நபா்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. மேலும், தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

அபாய கட்டத்தை தாண்டி சீறிப்பாயும் யமுனை: தொடரும் மக்களை வெளியேற்றும் பணிகள்

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியில் நீா் மட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை 207.46 மீட்டராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அருகிலுள்ள பகுதிகளையும் நிவாரண முகாம்கள... மேலும் பார்க்க

நிவாரண முகாம்களை சூழ்ந்த வெள்ளம்: மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் மக்கள்

தலைநகரில் சில பகுதிகளில் படகுகளைப் பயன்படுத்தி, மற்ற பகுதிகளில் முழங்கால் ஆழமான தண்ணீரைக் கடந்து, தேசிய பேரிடா் மீட்பு படையினா் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டனா். யமுன... மேலும் பார்க்க

தில்லியில் அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவா்கள் திடீா் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் மூத்தத் தலைவா்களும், மத்திய அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோரும் புதன்கிழமை நேரில் சந்தித்து த... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை அருகே குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விச் சென்ற தெருநாய்: பஞ்சாப் அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத்தில் உள்ள அரசு ராஜிந்திரா மருத்துவமனைக்கு அருகில், குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தெருநாய் கவ்விச் சென்ாக கூறப்படும் சம்பவத்தை தாமாக முன்வந்து இந்திய தேசிய மனித ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க