செய்திகள் :

தூங்கிக் கொண்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொன்ற ஓட்டுநர்கள் - கோவை அதிர்ச்சி

post image

தூத்துக்குட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனியார் நிறுவனத்துக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் சரவணக்குமார் மற்றும் மாரிமுத்து ஆகியோர் அந்த பெட்ரோல் பங்க் முன்பு லாரியை திருப்ப முயற்சி செய்தனர்.

கொலை செய்யப்பட்ட காளிமுத்து

அப்போது விபத்து ஏற்படுத்தும் வகையில் லாரியை இயக்கியதால் காளிமுத்து அவர்களை எச்சரித்துள்ளார்.

இதனால் காளிமுத்துவுக்கும், ஓட்டுநர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு ஓட்டுநர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து ஓட்டுநர்கள் சரவணக்குமார் மற்றும் மாரிமுத்து இரவு 12 மணியளவில் பெட்ரோல் பங்குக்கு மீண்டும் வந்துள்ளனர்.

சடலமாக

அப்போது மது போதையில் இருந்துள்ளனர். காளிமுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இருவரும் காளிமுத்துவை தூக்கத்திலேயே இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் காளிமுத்துவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஓட்டுநர்கள்  கொலை செய்துவிட்டு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியது தெரியவந்தது.

கைது

காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே கைது செய்யும்போது, இருவரும் தப்பி ஓட முயற்சித்தனர். இதில் அவர்கள் கீழே விழுந்து இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீச... மேலும் பார்க்க

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்த... மேலும் பார்க்க

`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்

இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராக... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க