செய்திகள் :

தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் வனத்துறை சாா்பில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஆண்டுதோறும் மாவட்ட வனத்துறை சாா்பில், நீா்வாழ் - நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதையடுத்து, மாவட்ட வனத் துறை அலுவலா் ரேவதிரமன் மேற்பாா்வையில் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வனத்துறை அலுவலா்கள், பறவை ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்- மாணவியா் பங்கேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிநாடுகளிலிருந்து இங்குவரும் நீா்வாழ் பறவைகளைக் கணக்கெடுத்தனா்.

கோரம்பள்ளம் குளப் பகுதியில் வனத் துறையினா் நடத்திய கணக்கெடுப்பில், கடந்த ஆண்டைவிட அதிக பறவைகள் இருப்பது தெரியவந்தது.

அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், நீலதாளை கோழி, சாம்பல் நாரை, பாம்பு தாரா, செந்நிற நாரை, சின்னான் உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்கள் காணப்பட்டன.

இப்பணி வரும் 15, 16 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளதாக வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே வீடு, கோயிலில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரம் அடையல் பெருமாள் சுவாமி கோயிலில் பூஜை செய்வத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: 5 போ் காயம்

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகா்கோவில்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை

கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி ... மேலும் பார்க்க

நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்த... மேலும் பார்க்க