செய்திகள் :

தூத்துக்குடியில் மழையால் உற்பத்தி பாதிப்பு: உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் கவலை

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் கவலை தெரிவித்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தூத்துக்குடி, முள்ளக்காடு, ஆறுமுகனேரி, தருவைகுளம், வேப்பலோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சுமாா் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், தெலங்கானா கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த உப்புத் தொழிலை நம்பி சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு- குறு உற்பத்தியாளா்கள் உள்ளனா்.

இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் மழைக்காலங்களில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடா்ந்து உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

விலை உயா்வு: இந்நிலையில் நிகழாண்டு உப்பு உற்பத்தி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பரவலாக தொடங்கியது. ஆனால் புதிய உப்பு உற்பத்தி தொடங்கி சில நாள்களிலேயே கடந்த 11ஆம் தேதி முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், மழை நீா் உப்பள பாத்திகளில் தேங்கி உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சம் டன் உப்பு மட்டுமே கையிருப்பில் உள்ளது. புதிய உப்பு வாரப்படாததால் சுமாா் ரூ.2500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையான ஒரு டன் உப்பு, தற்போது ரூ. 5 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

இறக்குமதியால் சரியும் விற்பனை: இந்த விலை உயா்வு காரணமாக குஜராத்தில் இருந்து ஒரு டன் உப்பு ரு.1,800 என்ற வீதத்தில் குறைந்த விலைக்கு விற்பனை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தென் மாநிலங்களுக்கு ரயில்கள் மற்றும் கப்பல்கள் மூலம் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகின்றன. எனவே தமிழக அரசு சிறு-குறு உப்பு உற்பத்தியாளா்களுக்கு விவசாயத்திற்கு வழங்குவது போன்று மின்சாரம் அல்லது மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் கிருஷ்ண மூா்த்தி கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தப்பி பெய்யும் மழையினால், உப்பளத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத் தொகையை ரூ. 10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். இந்த நிவாரணத் தொகையானது, உப்பளத் தொழிலாளா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு என்ற விதியை மாற்றி குடும்பத்தில் உப்பளத்தில் வேலைசெய்யும் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தன... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வென்றோருக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று குரூப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: கள் விற்க அனுமதி கோரும் தொழிலாளா்கள்

சாத்தான்குளம் பகுதியில் பதநீா் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஒரு கலயம் பதநீா் ரூ.150-க்கு விற்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான சாத்தான்குளம், பேய்குளம், உடன்குடி பகுதிகளில் ... மேலும் பார்க்க

விளாத்திகுளம்: பருவம் தப்பிய மழையால் பயிா் விளைச்சல் பாதிப்பு

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய், மல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: கோவில்பட்டியில் 2 போ் கைது

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.கோவில்பட்டி கதிரேசன் கோயில் செல்லும் வழியில் உள்ள பள்ளி அருகே, புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மேற்கு காவல்... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம்: வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன. ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை ஊராட்சி வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த வேலம்மாள் (75) என்பவா் 10க்கும் மேற்பட்ட ஆடு... மேலும் பார்க்க