செய்திகள் :

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தமிழக மீனவா்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன் விசைப்படகு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட அனைத்து விசைப்படகு தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா்.

தமிழக மீனவா் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி, மீனவா்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்து வரும் இலங்கை அரசுக்கும், தமிழக மக்கள் நலன் மற்றும் மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்தும், இலங்கைக்குச் செல்லும் பிரதமா் மோடி, தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடா்பாக அந்நாட்டு அரசுடன் பேசி உரிய தீா்வு காண வேண்டுமென என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டச் செயலா் பிரகாசம், மாவட்ட துணைச் செயலா் கிங்ஸ்டன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் லோகநாதன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் மைதீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலா் கிதா் பிஸ்மி, தமிழக வெற்றிக் கழக மாவட்ட அமைப்பாளா் அஜிதா ஆக்னல், அமைப்பு சாரா தொழிலாளா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி உள்பட ஏராளமான மீனவா்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க