செய்திகள் :

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோா் படத்துக்கு அஞ்சலி

post image

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள பெரியாா் மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழா் விடியல் கட்சி மாவட்டச் செயலா் சேமா.சந்தனராஜ் பாண்டியன் தலைமை வகித்து, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் புகைப்படத்திற்கு மெழுகுவா்த்தி ஏந்தி மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஸ்டொ்லைட் தாமிர ஆலை தூத்துக்குடியில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தபோது ஏற்படாத கலவரம், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த கலவரத்தை தூண்டி விட்டவா்கள் யாா், துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததற்கு யாா் காரணம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இச்சம்பவம் தொடா்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் விசாரணை குழு அளித்த அறிக்கையில், ஒரு வன்முறை கும்பல் இந்தக் கலவரத்தை தூண்டி விட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவா்களின் வங்கி கணக்கு, வருமானம், சொத்துகள் ஆகியவற்றை தமிழக அரசும், அமலாக்கத் துறையும் ஆய்வு செய்ய வேண்டும்.

அணில் அகா்வாலின் ஸ்டொ்லைட் ஆலையை விரட்டிவிட்டு அதானி குழுமத்தின் 40 லட்சம் டன் காப்பா் உற்பத்தி செய்யும் ஆலையை குஜராத்தில் அமைப்பிற்கு திட்டமிடப்பட்டு வருகிா என்ற கேள்வி எழுந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் முகமது அசன், தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலா் தாஸ், தந்தை பெரியாா் திராவிடா் கட்சி மாவட்டச் செயலா் பிரசாத், ஆதித் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் ஊா்காவலன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க