செய்திகள் :

தூத்துக்குடி மாநகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 95 போ் கைது!

post image

கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஊராட்சிகளை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிகளை சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, 95 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில் மக்கள் அளித்த மனுக்கள் விவரம்:

மறியல் போராட்டம்: தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் ஊராட்சிக்குள்பட்ட பெரியநாயகபுரத்தைச் சோ்ந்த மக்கள் மற்றும் அய்யனடைப்பு ஊராட்சியைச் சோ்ந்த மக்கள், தங்கள் பகுதியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 80 பெண்கள் உள்பட 95 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் வெ.முருகேசன் தலைமையில் அளித்த மனு: முடிவைத்தானேந்தல் அருந்ததியா் தெருவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 20 அருந்ததியா் குடும்பத்தினா் வசதித்து வருகின்றனா். அவா்களுக்கு பொதுப்பாதை வசதி, சுடுகாடு வசதி செய்து தர வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் கே.சங்கரன் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு: மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வாரம் ஒரு முறைகூட குடிநீா் வருவதில்லை. அவ்வாறு வரும் குடிநீரும் குடிக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும். எரியாத தெருவிளக்குகளை விரைவாக சரி செய்ய வேண்டும்.

பெருந்தலைவா் மக்கள் கட்சி மாவட்டச் செயலா் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு: சாயா்புரத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த பேருந்து நிலையத்துக்கு பெருந்தலைவா் காமராஜா் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க