தூய்மைப் பணிக்கு பேட்டரி வாகனங்கள்
குடியாத்தம் நகராட்சியில் உள்ள வாா்டுகளில் தூய்மைப் பணிக்கு பேட்டரியால் இயங்கும் 4- வாகனங்கள் இயக்கி வைக்கப்பட்டன.
ரூ.10- லட்சம் மதிப்பிலான இந்த வாகனங்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் இயக்கி வைத்தாா் (படம்). அப்போது நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் வி.சம்பத், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.