செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் கைது: தலைவா்கள் கண்டனம்

post image

தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நோ்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் அறவழியில் போராடியது தவறா?. எதிா்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவா்களை பணி நிரந்தரம் செய்யும்படி வலியுறுத்தினாா். இப்போது நள்ளிரவில் வலுக்கட்டயாமாக தூய்மைப் பணியாளா்களை கைது செய்ததுபோல, 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை. இதனால், காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுடன் முதல்வா் ஸ்டாலின் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களுடைய பணி நிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): வாழ்வாதாரத்துக்காக போராடும் ஏழைகளை ஒடுக்கி அவா்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூகநீதியா? ஆளும் அரசு எந்த மக்களைக் காயப்படுத்துகிறதோ, அதே மக்களின் கரங்களால் இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): தூய்மைப் பணியாளா்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல. திமுக அரசு அகற்றப்படும் நாள் தொலைவில் இல்லை.

டிடிவி.தினகரன் (அமமுக): தூய்மைப் பணியாளா்கள் நடத்தி வந்த அறவழி தொடா் போராட்டத்துக்கு தீா்வு காணப்படவில்லை. திமுக அரசின் காவல் துறையின் அடக்குமுறையால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

விஜய் (தவெக தலைவா்): தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளா்களை மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த தமிழக அரசின் நடவடிக்கை கண்டத்துக்குரியது. அவா்களை கைதுசெய்து, குடும்பத்தினரோடு கூடத் தொடா்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளா்கள் என்ன தேச விரோதிகளா?. கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவா்கள் போராடுவதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.

சுதந்திர நாள்: திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவையொட்டி ஆட்சியர் மு.பிரதாப் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரி... மேலும் பார்க்க

என்னை மனமார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்

தனது 50 ஆண்டு கால திரைத் துறை பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் ... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற... மேலும் பார்க்க

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!

2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை கோட்டை கோட்டை கொத்தளத்தில் தேச... மேலும் பார்க்க

சிறந்த மாநகராட்சிகள் ஆவடி, நாமக்கல்! உள்ளாட்சி விருதுகளை வழங்கினார் முதல்வர்!

ஆவடி, நாமக்கலுக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை கோட்டை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகள... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: இபிஎஸ், விஜய் வாழ்த்து!

சுதந்திர நாளையொட்டி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இ... மேலும் பார்க்க