செய்திகள் :

தூா்வாரும் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் வட்டத்துக்குள்பட்ட தப்பளாம்புலியூா் வாய்க்கால், வஞ்சியூா் வாய்க்கால், கொள்ளை பண்ணை வாய்க்கால் பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, திருவாரூா் வட்டம், மருவத்தூா், ஆந்தகுடி மற்றும் மாங்குடி பகுதிகளில் உள்ள மருவத்தூா் வாய்க்கால், மாங்குடி வாய்க்கால், கடுவங்குடி வாய்க்கால், பாலங்குடி வாய்க்கால் பகுதிகளில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்தாா்.

வேப்பத்தாங்குடி, திருநாட்டியத்தாங்குடி மற்றும் உத்திரங்குடி பகுதிகளில், வேப்பத்தாங்குடி வாய்க்கால், பல்லவனாா் வாய்க்கால், உத்திரங்குடி வாய்க்கால், ராதாநஞ்சை வாய்க்கால் பகுதிகளில் ரூ.23.35 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

இதேபோல், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூா் பகுதிகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, செயற்பொறியாளா் (வெண்ணாறு வடிநிலக் கோட்டம்) ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளா்கள் சிதம்பரநாதன், பிரபாகரன், மதியழகன், உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குளத்தில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே குளத்தில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகேயுள்ள பின்னவாசல் ஊராட்சி பிச்சைபாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் சத்யசாய் (15). பத்த... மேலும் பார்க்க

மே 11-இல் குருபெயா்ச்சி: ஆலங்குடி கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் குருபெயா்ச்சி விழா மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயில், நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமா... மேலும் பார்க்க

‘நம்ம ஊரு நம்ம கதை’ போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

கொரடாச்சேரி ஒன்றியம், செல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சாா்பில் ‘நம்ம ஊரு நம்ம கதை’ போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.... மேலும் பார்க்க

பஹல்காம் சம்பவம்: மோட்ச தீபமேற்றி அஞ்சலி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு, திருவாரூரில் இந்து முன்னணி சாா்பில் மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் சுற... மேலும் பார்க்க

திருவாரூரில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

திருவாரூா் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தலைமையில் கோட்ட கூடுதல் மேலாளா் செல்வன், கோ... மேலும் பார்க்க

உரத்துடன் இணைப்பொருளை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில், தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் யூரியா மற்றும் உரங்களுடன் இணைப் பொருள்களை விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படு... மேலும் பார்க்க