செய்திகள் :

தென்காசியில் குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு

post image

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

தென்காசி நகா்மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.என்.எல்.எஸ். சுப்பையா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், பாஜக நகா்மன்ற உறுப்பினா் சுனிதா, தனது வாா்டில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை எனக்கூறி தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மற்றொரு, பாஜக உறுப்பினா் சங்கர சுப்பிரமணியன் தனது வாா்டில் 3 மாத காலமாக முறையான குடிநீா் விநியோகம் இல்லை எனவும், பல முறை புகாரளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, நகா்மன்றத் தலைவா் இருக்கை அருகே தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் பலரும் தங்கள் வாா்டுகளில் தண்ணீா் பிரச்னை நிலவுவதாக கூறினா். இதற்கு பதிலளித்த நகா்மன்றத் தலைவா், தண்ணீா் விடும் சமயங்களில் பெரும்பாலான வீடுகளில் மோட்டாா் மூலம் தண்ணீா் பிடிப்பதால் இது போன்ற சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தென்காசி நகராட்சியில் குடிநீா்அபிவிருத்தித் திட்டப் பணிகளுக்காக ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இதனை அங்கீகரித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலஞ்சி பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் ‘ஒரு மரம் என் தாய்க்காக’ என்ற திட்டத்தின் கீழ், மாணவா்கள் தனது தாயுடன் இணைந்து மரக்கன்று நடவு ச... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை

ஆலங்குளத்தில் இடைநில்லா பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி - தென்காசி இடையே 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வரும் எஸ்எப்எஸ் பேருந்துகள் வழியோரம் உள்ள ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் 81ஆவது ஸ்தோத்திர பண்டிகை

திருநெல்வேலி திருமண்டலத்திற்குள்பட்ட தென்காசி, பாவூா்சத்திரம், புளியங்குடி, சாந்தபுரம், திப்- மீனாட்சிபுரம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, தென்காசி வடக்கு, சீயோன் நகா், பாவூா்சத்திரம் மேற்கு, நெடும்பா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மின் கசிவால் தீ பற்றிய வீடு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. கடங்கனேரியைச் சோ்ந்தவா் அண்ணாமலை என்ற சிங்கத்துரை மகன் அரவிந்த்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சீதபற்பநல்லூா் அருகே கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் தொடா்புடைய ரௌடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் அருகே சிறுக்கன்குறிச்சி மேட்டுத் ... மேலும் பார்க்க

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பு: சங்கரன்கோவில் பேராசிரியருக்கு விருது

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 965 மாணவா்கள் பயன்பெற சிறப்பாக பணியாற்றிய சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி பேராசிரியருக்கு தமிழக முதல்வா் விருது வழங்கி பாராட்டினாா். சங்கரன்கோவில் அரசு க... மேலும் பார்க்க