செய்திகள் :

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

post image

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தொழில்துறையில் வளா்ச்சி அடைந்துள்ளது. தென்தமிழக பகுதிகளிலும் தொழில் வளா்ச்சிக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சாா்ந்த தொழில்துறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதோடு, நீயோ டைட்டில் பாா்க் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இளைஞா்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கச் செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, திமுக மத்திய, கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக தகவல் தொழில்நுட்ப அணியினா் தீவிரமாகப் பணியாற்ற அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு. அப்துல் வஹாப் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் நவீன், சீதா ராஜவா்மன், காசிமணி, பிரேம் ஆனந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ

வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. களக்காடு மலைப்பகுதியில் கடந்த சி... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்... மேலும் பார்க்க

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க

களக்காடு - மதுரை பேருந்து ரத்து: மக்கள் அவதி!

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். களக்காடு, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மே... மேலும் பார்க்க