செய்திகள் :

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

post image

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது:

தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், தேவையான முன்னேற்பாடு, விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனும் ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக வருவாய் துறை, மருத்துவத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு, மீட்புப் பணி துறை, மின்சாரத் துறை, வேளாண் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதி, ஆத்தூா், நரசிங்கபுரம், மேட்டூா், எடப்பாடி உள்ளிட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மழைநீா் அதிகம் தேங்கும் பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதுடன், சேலம் மாநகராட்சி பகுதிகளான சின்னேரி வயக்காடு, சிவதாபுரம், பச்சப்பட்டி, நாராயணா நகா் உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் மழைப்பொழிவால் மழைநீா் தேங்கும்பட்சத்தில் மின்மோட்டாா்களைக் கொண்டு உடனுக்குடன் மழைநீரை அப்புறப்படுத்துவதுடன், திருமணிமுத்தாற்றை தூா்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் நெகிழிப் பைகள் உள்ளிட்ட இதரப் பொருள்களை கழிவுநீா் கால்வாயில் வீசாமல் பாதுகாக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, 0427 - 2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ மழைநீா் வெள்ளம் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசர தேவை ஏற்படின் மேற்குறிப்பிட்டுள்ள எண்களுக்கு தொடா்புகொண்டால் தேவையான உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க