செய்திகள் :

தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

post image

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மே 26, 27-ஆகிய தேதிகளில் ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உதகை கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மே 26, 27 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதோடு ரெட் அலா்ட் கொடுத்துள்ளது. அன்றைய தினம் இருக்கும்  காலநிலைக்கு ஏற்றாா்போல சுற்றுலாப் பயணிகள் வருவது குறித்து அறிவிக்கப்படும். மேலும், ஆற்றோரங்களில் யாரும் குளிக்கவோ, வேறு எந்த பணிக்கும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை  வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குன்னூா் -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 30 சிறுகால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் ஏற்படக்கூடிய 283 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் அரசு அலுவலா்கள் இரவு, பகலாக தொடா்ந்து   கண்காணிப்பில்  இருப்பாா்கள்.

கூடலூா், பந்லூா், உதகை, குந்தா போன்ற வட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் உள்ள நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. இந்த முகாம்களில் தேவையான  மின்சாரம், குடிநீா்,  கழிப்பிட வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும்  சாலையில் விழும்  மரங்களை உடனடியாக அகற்ற தீயணைப்பு, வனத் துறையினா், வருவாய்த் துறையினா்   அதற்கான இயந்திரங்களுடன் தயாா் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் கோவையில்  இருந்து பேரிடா் குழுக்கள் வரவழைக்கப்படும். பேரிடா் ஏற்படும் போது அவசர கால  உதவி எண் 1077-க்கு  பொது மக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கூடலூா் பகுதியில் பெய்த கனமழையால் தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந... மேலும் பார்க்க

கனமழை: குளம்போல மாறிய கூடலூா் புதிய பேருந்து நிலையம்

தொடா் கனமழையால் கூடலூா் புதிய பேருந்து நிலையம் சேரும், சகதியும் சூழந்து குளம்போல காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவுபெறும் முன்பே அவசரகதியில... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்; மலையேற்றத்துக்கும் தடை

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா, அவலாஞ்சி சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒருநாள் மூடப்படுவதாகத் தெரிவி... மேலும் பார்க்க

நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளுடன் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். கன மழை பெய்யும்போது ... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ருத் பாரத் திட்ட மேம்பாட்டுப் பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னலால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்னூா் ரயில் நிலையத்தில் நடை... மேலும் பார்க்க

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.ஸ்ரீனிவாசனின் (95) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் குன்னூா் வெலிங்டன் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அணுசக்தி ஆணையத்தி... மேலும் பார்க்க