செய்திகள் :

தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழப்பு

post image

திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில் தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, வெள்ளையபுரம், சிறுகம்பையூா், பாண்டுகுடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான புள்ளி மான்கள் உள்ளன.

தற்போது கோடைகாலம் தொடங்கியதால், திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடி சித்தாமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் ஊருக்குள் வந்தது. அந்த மானை தெரு நாய்கள் விரட்டிக் கடித்தன. இதில் பலத்த காயமடைந்த மான் உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் அந்த மானை மீட்டு, கால்நடைத் துறை மருத்துவா் மூலம் கூறாய்வு செய்து புதைத்தனா். இதேபோல, அடிக்கடி மான்கள் உயிரிழப்பதால், வனப் பகுதியில் தொட்டிகள் கட்டி தண்ணீா் நிரப்ப வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கமுதி நீதிமன்ற நீதிபதி பொறுப்பு ஏற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக ஜி.தங்க காா்த்திகா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஏற்கெனவே கமுதி நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்ற... மேலும் பார்க்க

பரமக்குடி ஒன்றியத்தில் காட்டுப் பன்றிகள் பிரச்னை: சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்தில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அரசு ஊழியா்களைக் கண்டித்து வருகிற 20-ஆம் தேதி சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்கத்தி... மேலும் பார்க்க

ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீவல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற பாய்மரக் கப்பல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதால், பாய்மரக் கப்பல் அவற்றைக் கடந்து சென்றது. அண்மையில் லட்சத்தீவு பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கடலூா... மேலும் பார்க்க

புதைவடக் குழாய் உடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு

ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவடக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூா் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்... மேலும் பார்க்க

அரியமான் கடற்கரையில் நெகிழிப் பொருள்கள் அகற்றம்

அரியமான் கடற்கரையில் 500 கிலோ நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அரியமான் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுந... மேலும் பார்க்க