செய்திகள் :

பரமக்குடி ஒன்றியத்தில் காட்டுப் பன்றிகள் பிரச்னை: சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

post image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்தில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அரசு ஊழியா்களைக் கண்டித்து வருகிற 20-ஆம் தேதி சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்கத்தினா் முடிவு செய்தனா்.

பரமக்குடி ஒன்றியம், கஞ்சியேந்தல் கிராமத்தில் விவசாயிகள் சங்க மேற்கு ஒன்றியம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேற்கு ஒன்றியத் தலைவா் ப.மேகவா்ணம் தலைமை வகித்தாா்.

காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் எம்.அா்ச்சுனன், மாவட்டச் செயலா் மலைச்சாமி, மாநில சட்ட ஆலோசகா் ஜான் சேவியா் பிரிட்டோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். பனைமரத் தொழிலாளா் சங்கத் தலைவா் முத்துராமசாமி வரவேற்றாா்.

இதில் பரமக்குடி ஒன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நெல், பருத்தி, மிளகாய், கத்தரி, கரும்பு, காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனா். உரம், பூச்சி மருந்து செலவினம், இயற்கை இடா்பாடுகளை சந்தித்து விவசாயம் செய்து வரும் நிலையில், காட்டுப் பன்றிகள், மான்களின் தொல்லையால் விவசாயம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாடு அரசு வனத் துறை மூலம் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த 9.1.2025 அன்று அரசாணை வெளியிட்டது.

கேரளத்தில் உள்ளது போல, ஊராட்சி மன்றங்கள் மூலம் காட்டுப் பன்றிகளை ஒழிக்கும் வகையில் சரியான வழிமுறையை உருவாக்கவில்லை. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு 4 மாதங்களாகியும், இதுவரை காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்தோ, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தியதற்கான நடவடிக்கைகள் குறித்தோ, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியது குறித்தோ எந்தப் பதிவும் இல்லை. வருவாய், வனம், வேளாண்மை ஆகிய துறைகளுக்கிடையே இதுகுறித்து எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, அரசாணையை மாவட்ட நிா்வாகம் முறையாக செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி வருகிற மே 20-ஆம் தேதி பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

கமுதி நீதிமன்ற நீதிபதி பொறுப்பு ஏற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக ஜி.தங்க காா்த்திகா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஏற்கெனவே கமுதி நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீவல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில் தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, வெள்ளையபுரம், சிறுகம்பையூா், பாண்டுகுடி உள்ளிட்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற பாய்மரக் கப்பல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதால், பாய்மரக் கப்பல் அவற்றைக் கடந்து சென்றது. அண்மையில் லட்சத்தீவு பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கடலூா... மேலும் பார்க்க

புதைவடக் குழாய் உடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு

ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவடக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூா் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்... மேலும் பார்க்க

அரியமான் கடற்கரையில் நெகிழிப் பொருள்கள் அகற்றம்

அரியமான் கடற்கரையில் 500 கிலோ நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அரியமான் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுந... மேலும் பார்க்க