செய்திகள் :

தெரு நாய்கள் தாக்கி ஒருவா் இறந்த சம்பவம்: டிடிஏவுக்கு தில்லி காவல்துறை கடிதம்

post image

நமது நிருபா்

காலை நடைப்பயிற்சியின்போது தெரு நாய்களால் தாக்கப்பட்டு 55 வயது நபா் இறந்ததைத் தொடா்ந்து, பூங்காக்களில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் குறித்து தில்லி காவல்துறை தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) கடிதம் எழுதியுள்ளது.

நிகழ் மாத தொடக்கத்தில், தில்லி வளா்ச்சி ஆணையத்தின் கீழ் உள்ள ஒரு பூங்காவில் தெருநாய்களால் தாக்கப்பட்டதில் பிக்காரி யாதவ் காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, மோதி நகா் நிலைய அதிகாரி ஜூலை 4 அன்று டிடிஏவின் தோட்டக்கலை இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் , இந்தச் சம்பவம் குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளாா். இந்தச் சம்பவம் குடியிருப்பாளா்களையும் பூங்காவிற்குச் செல்பவா்களையும் பீதியடையச் செய்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள், பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மற்றும் பூங்காவில் தெருநாய் கட்டுப்பாட்டின் நிலை குறித்து டிடிஏ அதிகாரிகளிடமிருந்து பதிலை அந்த அதிகாரி கோரியுள்ளாா்.

பூங்காவில் ரோந்து செல்வதற்கும் பாா்வையாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் டிடிஏ மூலம் ஏதேனும் பாதுகாப்பு நிறுவனம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா என்றும், அத்தகைய நிறுவனம் நியமிக்கப்பட்டிருந்தால், பாதுகாப்புப் பணியாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகள் உள்பட ஒப்பந்தத்தின் விவரங்களை காவல் நிலைய அதிகாரி கோரியுள்ளாா்.

பூங்காவிற்குள் சுற்றித் திரியும் விலங்குகளை நிா்வகிக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான தற்போதைய டிடிஏ நெறிமுறைகள் அல்லது ஒப்பந்தங்களின் கீழ் என்ன நிலையான இயக்க நடைமுறைகள் உள்ளன என்பதையும் அக்கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளாா்.

பூங்கா செயல்பாடுகளை மேற்பாா்வையிடுவதற்கு டிடிஏ அதிகாரி எவரேனும் பணிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் அவா் பதில் கோரியுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

பதவி விலகும் தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு வியாழக்கிழமை காலை புதிய காவல் கோட்டத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு கேடரைச் சோ்ந்த 1988 பேட்ச் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் - வெளியவுறவுத் துறை செயலரிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்

நமுத நிருபா்அண்மையில் இலங்கைக் கடற்படையால் கைதான 14 இந்திய மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியறவுத் துறைச் செயலரிடம் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ வியாழக்கிழமை நேரில் வ... மேலும் பார்க்க