செய்திகள் :

`தெரு விலங்குகளை பராமரிக்க MBBS படிப்பை விட்ட இளம் பெண்' - யார் இந்த த்ரிஷா படேல்?

post image

விலங்குகள் மீதான அதீத பாசத்தால், இளம் பெண் ஒருவர் தனது எம்பிபிஎஸ் படிப்பை விட்டு விட்டு தெரு விலங்குகளை பராமரித்து வருகிறார். எம்பிபிஎஸ் படிப்பை விட்டதும் இல்லாமல், இந்த விலங்குகளை பராமரிப்பதற்காக தனது சேமிப்பு பணத்தையும் செலவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த த்ரிஷா படேல், எம்பிபிஎஸ் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஆதரவற்ற விலங்குகளுக்கு புது வாழ்க்கை அளித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில், 350-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு இவர் புதிய வாழ்க்கையை அளித்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே விலங்குகள் மீது அதிக பாசம் கொண்ட த்ரிஷா தான் படித்துக் கொண்டிருந்த எம்பிபிஎஸ் படிப்பை விட்டு விட்டு தெருக்களில் காயமடைந்த அல்லது ஆதரவற்ற விலங்குகளை பராமரிக்கத் தொடங்கிவிட்டார்.

தங்களின் வலியை வெளிப்படுத்த முடியாத குரலற்ற விலங்குகளுக்கு தனது சேவையை தொடர ஒரு துணிச்சலான முடிவு எடுத்தார். இதற்காக கால்நடை மருத்துவர் படிப்பை மீண்டும் தொடங்கினார்.

அதுமட்டுமில்லாமல் சூரத்தில் இருக்கும் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, அந்த இடத்தில் முடங்கி இருக்கும் தெரு விலங்குகளை பராமரித்து வருகிறார். 35 நாய்கள், 40 பூனைகள் உட்பட 150 -க்கும் மேற்பட்ட விலங்குகளை இங்கு பராமரித்து வருகிறார்.

இந்த விலங்குகளால் மற்ற விலங்குகள் செய்யக்கூடிய அன்றாட வேலைகளை செய்ய முடியாது. இந்த விலங்கிற்கு தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு அனைத்தையும் த்ரிஷா பார்த்துக் கொள்கிறார். இதற்காக தனது சேமிப்புகள் அனைத்தையும் இதில் செலவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட முறையில் கடன்களையும் வாங்கி இந்த விலங்குகளை பராமரித்து வருகிறார்.

அவரது குடும்பத்தினர்களும் நண்பர்களும் இவரது இந்த செயலை ஏற்கவில்லை, அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. இருந்தபோதிலும் த்ரிஷா தனது நிலைப்பாடில் உறுதியாக இருந்துள்ளார்.

மருந்து வழங்குவது முதல் விலங்குகளுக்கு கழிப்பறையை பயன்படுத்த உதவுவது வரை எல்லாவற்றையும் இவரே கையாளுகிறார். இதுமட்டுமில்லாமல் சுமார் 450 தெரு விலங்குகளுக்கு இவரது கையால் உணவும் வழங்குகிறார்.

திரிஷாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

``திருமண செலவுக்கு போட்ட பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாலை..'' - எளிமையாக திருமணம் செய்த தம்பதி

திருமணம் என்றாலே பல லட்சம் செலவு பிடிக்கும். ஆனால் மகாராஷ்டிரா வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை அடுத்தவர்கள் பார்த்து பெருமைப்படும் அளவுக்கு செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

Tata: மொபைல் கூட இல்லாமல், 2 BHK வீட்டில் வசிக்கும் ரத்தன் டாடாவின் தம்பி; காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் செல்வாக்கு மிக்க குழுமத்தில் ஒன்று டாடா குழுமம். இரும்பு முதல் சாப்ட்வேர் வரை வரை, ஹோட்டல்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை டாடா குழுமம் இல்லாத தொழில் இல்லை எனக் கூறுமளவுக்கு பரந்த நிறுவன வலையம... மேலும் பார்க்க

`ரூ.10,000 பந்தயம்' - 5 பாட்டில் மதுவை ராவாய் குடித்த இளைஞர்.. சவாலுக்காக உயிரை விட்ட பரிதாபம்..!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நன்கலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (21). கார்த்திக்கும் அவரது நண்பர்கள் சிலரும் அமர்ந்து அடிக்கடி மது அருந்துவதுண்டு. அப்படி அவர்கள் மது அருந்த அமர்ந்... மேலும் பார்க்க

``social media-வை விட, நிஜ வாழ்க்கையின் மதிப்பு முக்கியம்..'' - Influencer மரணம் குறித்து டாப்ஸி

2k கிட்ஸின் பெரும் உழைப்பு followers எண்ணிக்கையை அதிகரிப்பதற்குதான் செலவழிக்கப்படுகிறது. அதில்தான் தங்களின் மதிப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். followers எண்ணிக்கை கூடும்போது கொண்டாடுவதும், குறையும் போ... மேலும் பார்க்க

`வீட்டில் டார்ச்சர்' - டியூசனுக்கு வந்த மாணவனுடன் எஸ்கேப் ஆன ஆசிரியை - நடந்தது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயது பெண் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தினார். அவரிடம் 5-வது வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவனும் டியூசன் படித்துள்ளான். 23 வயது பெண்ணிடம் அவரது பெற்... மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர்; பதிலுக்கு பெண் செய்த வேலை.. - வைரல் வீடியோ!

வட இந்தியாவைச் சேர்ந்த இன்ஃப்ளுயன்சர் ஒருவர், வீட்டின் மாடிப் பகுதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் வந்த இளைஞர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொடும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகி... மேலும் பார்க்க