செய்திகள் :

தேசிய அணிக்குத் திரும்பும் வீரர்! பிளே-ஆஃப் சுற்றில் ஆர்சிபிக்கு பின்னடைவாக அமையுமா?

post image

தேசிய அணிக்குத் திரும்பும் வீரரால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு பின்னடைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற 17 சீசன்களிலும் கோப்பை தாகத்தை தணிக்க முடியாத ஆர்சிபி அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதே வேட்கையுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட முதல் நான்கு இடங்களைப் பிடித்துவிடும் நிலையில் இருந்தாலும் முதலில் இரண்டு இடங்களுக்கான போட்டியில் பெங்களூரு அணி தீவிரமாக உள்ளது.

பெங்களூரு அணியில் விராட் கோலி, பில் சால்ட், படிதார், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் பேட்டிங்கிலும், புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யஷ் தயாள் ஆகியோர் பந்துவீச்சிலும், க்ருணால் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு என சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ரொமாரியோ ஷெப்பர்ட்..

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் 2-வது வேகமான அரைசதம் விளாசிய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளார். இதனால், ஒருவேளை ஆர்சிபி அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றால் அவரால் அணியில் இடம்பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அயர்லாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மே 21 ஆம் தேதி தொடங்குகிறது. அதேவேளையில் ஐபிஎல்லின் பிளே-ஆஃப் சுற்று மே 20 ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இது ஆர்சிபி அணிக்கு மிகவும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இவரைத் தவிர்த்து ஆர்சிபி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தோள்பட்டை அசௌகரியம் காரணமாக சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அதேபோல சென்னைக்கு எதிரான போட்டியில் ரவீந்தர ஜடேஜா அடித்தப் பந்தை பிடிக்க முயன்றபோது கேப்டன் ரஜத் படிதார் கையில் காயமடைந்தார்.

அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டும் காய்ச்சல் காரணமாக சில ஆட்டங்களில் விளையாடவில்லை. இது போன்றவை ஆர்சிபி அணிக்கு மிகவும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், மற்ற வீரர்களின் பங்களிப்புடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? என்பதே ரசிகர்களில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதையும் படிக்க: ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, நெஹ்ராவுக்கு அபராதம்!

ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால், இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களில் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் கார... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள்..! நெகிழ்ந்த சிஎஸ்கே வீரர்!

சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார். சிறப்பாக விளையாட... மேலும் பார்க்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - தில்லி போட்டி மீண்டும் தொடங்குமா?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இதன் விளைவாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து, இரு தரப்பிலிருந்தும் தா... மேலும் பார்க்க

ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக... மேலும் பார்க்க

ரசிகர்களுக்கு ஐபிஎல் டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் அணிகள்!

ஐபிஎல் தொடர் அடுத்த ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை அணிகள் தொடங்கியுள்ளன.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி க... மேலும் பார்க்க