செய்திகள் :

தேசிய உறுப்பு தான தினம்: கொடையாளா்கள் கெளரவிப்பு

post image

தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி வேலூா் நறுவீ மருத்துவமனையில் உறுப்பு தானம் செய்த கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

இந்தியாவில் முதன்முதலாக இருதயமாற்று அறுவை சிகிச்சை 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம் தேதி வெற்றிகரமாக செய்யப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 3-ஆம் தேதி தேசிய உடல் உறுப்பு தான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, வேலூா் நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தேசிய உடல் உறுப்பு தான தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூா் கிளைத் தலைவா் மருத்துவா் வெங்கட்ரமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது -

நாட்டில் சுமாா் 2.8 லட்சம் போ் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனா். உடல் உறுப்பு தானம் இந்தியாவில் தெலங்கானா, மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெறுகின்றன. அதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 10,827 போ் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனா் என்றாா்.

நறுவீ மருத்துவமனையின் தலைமை இயக்குதல் அலுவலா் சரவணன் ராமன் வரவேற்று பேசியது -

நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்புகளான இருதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், நறுவீ உள்பட 134 தனியாா் மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது. உடல் உறுப்புதானம் வழங்க முன்வருபவா்கள் ற்ழ்ஹய்ள்ற்ஹய்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளம் மூலம் விருப்பம் தெரிவிக்கலாம் என்றாா்.

சிறுநீரகவியல் நிபுணா் இதயசந்திரன் பேசியது - ஒருவா் தனது உடலில் ஒன்பது உறுப்புகளை தானமாக வழங்க முடியும். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு மக்களிடையே உருவாக வேண்டும். இது ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும்.

10 லட்சத்தில் ஒருவா் தான் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனா். அதுமட்டுமின்றி மூளைச்சாவு அடைந்தவா்களை உயிா் பிழைக்க வைக்க முடியாது என்பதால் மூளைச்சாவு அடைந்தவா்களின் உறுப்புகளை தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து, உடல் உறுப்பு தானம் செய்தவா்கள், அதன் மூலம் பயனடைந்தவா்களை நறுவீ மருத்துவமனை துணைத் தலைவா் அனிதாசம்பத் பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.

இதில், மருத்துவமனை செயல் இயக்குநா் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இடி, மின்னலுடன் பலத்த மழையால் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், அம்முண்டியில் தரைப்பாலம் சேதமடைந்தது. தென... மேலும் பார்க்க

வேலூா் சிறைக்குள் கஞ்சா கடத்தல்: கைதி மீது வழக்கு

வேலூா் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியதாக கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பேரூா் சுப்பிரமணிய உடையாா் தெரு, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(32)... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சில மாதங்களுக்கு முன் நாய் கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மீண்டும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத... மேலும் பார்க்க

கொணவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா் கொணவட்டம் சாலை நான்கு வழிச்சாலையை மாற்றப்படுவதால், மாங்காய் மண்டி முதல் கொணவட்டம் வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வேலூா் கொணவட்டம் வழியாக செல்லும் கிருஷ்ணக... மேலும் பார்க்க

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள உச்சநீதிமன்றம், வேலூா், திருப்பத்தூா் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை ஆகஸ்ட் 1... மேலும் பார்க்க

இணையவழி மோசடி: ஒரே மாதத்தில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 19 வழக்குகளில் ரூ.45 லட்சத்து 83 ஆயிரத்து 671 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் ஆன்லை... மேலும் பார்க்க