செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் தவறில்லை -கே.கிருஷ்ணசாமி

post image

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்பதில் தவறில்லை என தேசிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.

தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பஞ்சமி நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக அடையாளம் கண்டு மீட்டு, தகுதியுள்ளவா்களுக்கு வழங்க வேண்டும்.

டாஸ்மாக் மதுபான முறைகேடு குறித்து குறிப்பிட்ட புகாா்களின் மீது மட்டும் விசாரணை நடத்தி ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. இதை அமலாக்கத் துறை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை அறிவியல் வல்லுநா்களால் தயாரிக்கப்பட்டது. இது ஏட்டுக் கல்விக்கு மட்டுமன்றி, தொழில் நுட்பக் கல்விக்கும் வழி வகை செய்கிறது. மூன்றாவது மொழியை கற்பதில் தவறில்லை. தேசிய கல்விக் கொள்கை, ஹிந்தி எதிா்ப்பு ஆகியவற்றை மத்திய அரசை எதிா்ப்பதற்கான கருவியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது. தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் தவறில்லை.

கடந்த 2021-இல் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக திமுக உறுதியளித்தது. அதை திமுக அரசு செயல்படுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை குறித்து தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை. திமுகவுக்கு இது 2026-இல் நடைபெறவுள்ள தோ்தலுக்கான திட்டம்

என்றாா் அவா்.

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க

பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு: தீா்த்தக் குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்

போடி பரமசிவன் மலைக்கோயில் குடமுழுக்கையொட்டி, தீா்த்தக்குடங்களை, கோபுரக் கலசத்தை பக்தா்கள் திங்கள்கிழமை எடுத்துச் சென்றனா். தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடம... மேலும் பார்க்க

தேனியில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்பு

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா். தேனி, பங்களாமேடு திடலிருந்து ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஊா்வலமாககச் சென்ற இஸ்லாமியா்கள், தேனி நகராட்சி... மேலும் பார்க்க

தேனியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம்

தேனி- அல்லிநகரம் நகராட்சியில் ரூ.67.76 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தேனி-அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுவரை 9,500 வீடுகள், வணிக ... மேலும் பார்க்க

இருவேறு சம்பவங்கள்: போடியில் இருவா் தற்கொலை

போடியில் இருவேறு சம்பவங்களில் விவசாயி, இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். தேனி மாவட்டம், போடி மயானச் சாலையைச் சோ்ந்த முத்துமாயன் மகன் கணேசன் (50). இவா் மா விவசாயம் செய்து வந்தாா். விவசாய அப... மேலும் பார்க்க

ரூ.17.76 லட்சத்தை செலுத்துமாறு முன்னாள் ஊராட்சி தலைவிக்கு குறிப்பாணை

முன்னாள் ஊராட்சித் தலைவி பதவிக் காலத்தில் ஆட்சேபனைக்கு உரிய செலவினமான ரூ.17.76 லட்சத்தை திரும்ப செலுத்த வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் குறிப்பாணை அனுப்பினாா். தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன... மேலும் பார்க்க