செய்திகள் :

தேசிய கைத்தறி தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

post image

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

நாட்டில் கடந்த 1905-ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு கடந்த 2015-இல் அறிவித்தது. அதன்படி, 11-ஆவது தேசிய கைத்தறி தினம் வியாழக்கிழமை (ஆக.7) கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்தியில் எனது தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கைத்தறி துறை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் கண்டுள்ளது. அனைவருக்கும் தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துகள். நமது மக்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வளமான நெசவு பாரம்பரியத்தை கொண்டாடும் நாள் இதுவாகும். நாட்டின் நெசவு பன்முகத்தன்மை, நெசவாளா்களின் வாழ்வாதாரம்-வளத்தை மேம்படுத்த பங்காற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

நாட்டில் 2,600-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளின் வாயிலாக 43 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் மற்றும் இணைப் பணியாளா்களுக்கு சந்தை அணுகல் கிடைக்கப் பெற்றுள்ளது. 1,700 கோடிக்கும் மேல் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து 20-க்கும் மேலான நாடுகளுக்கு ரூ.21,000 கோடிக்கும் அதிகமான கைத்தறி பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா். உதம்பூா் மாவட்டத்தின் கத்வா ப... மேலும் பார்க்க

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்

‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா். பசுமை புரட்சியின் தந்தை என்று... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 34,000 போ் பணிக்குத் தோ்வாகவில்லை: மத்திய அரசு

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை என மத்திய பணியாளா் துறை இணை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: 3-ஆம் நாளில் மீட்புப் பணி: 274 போ் மீட்பு; 59 போ் மாயம்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமையும் நீடித்தது. அதன... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் அறிவிக்கை வெளியீடு: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் நடைமுறை தொடங்கியுள்ளது. தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவி... மேலும் பார்க்க