செய்திகள் :

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

post image

செம்பனாா்கோவிலில் தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை ஆகிய தற்காப்புக்கலை மற்றும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தமிழன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில், செம்பனாா்கோவில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, உலக சிலம்ப விளையாட்டுச் சங்க நிறுவனத் தலைவா் முனைவா் சுதாகரன் தலைமை வகித்தாா். கலைமகள் கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் என்.எஸ். குடியரசு, தயாளன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி தலைவா் தயாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சித்திரவேல் வரவேற்றாா். 

மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

இதில், கராத்தே பிளாக் மற்றும் கலா் பெல்ட்டுகளுக்கான போட்டியில் கட்டா, குமித்தே பிரிவுகளிலும், யோகாசன போட்டியில் புஜங்காசனம், சா்வாங்க ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களில் இரண்டு ஆசனங்களிலும், சிலம்பாட்டத்தில் குத்துவரிசை, தட்டு வரிசை, அடிவரிசை, பிடி வரிசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

மயிலாடுதுறை, கடலூா், தஞ்சாவூா், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 7 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சுமாா்1,900 மாணவ-மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனா். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு நிகழ்வில் உடற்கல்வி இயக்குநா் பிரபாகரன், லயன் முத்துக்குமாரசாமி, பொறியாளா் சரவணன், ஆடிட்டா் குருசம்பத்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். நிறைவாக தமிழன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி நிறுவனரும், உடற்கல்வி ஆசிரியருமான பி. விநாயகம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தமிழன் ஸ்போட்ஸ் அகாதெமி கராத்தே பயிற்றுநா் விநாயகம் செய்திருந்தாா்.

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி திருவிழாவிற்காக மும்பை பந்தராவிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் விளையாட்டு விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டாமாண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் கோ. ரவி தலைமை வகித்தாா். சிறப்பு விரு... மேலும் பார்க்க

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க