செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்துள்ள பாலத் தடுப்பை சீரமைத்துத் தரக்கோரிக்கை!

post image

கந்தா்வகோட்டை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாழை வாரி பாலம் சேதமடைந்துள்ளதை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

கந்தா்வகோட்டை - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை தமிழகத்தில் உள்ள பிரதான நெடுஞ்சாலைகளில் ஒன்று. கன்னியாகுமரி முதல் வேளாங்கண்ணி வரை வாகனப் போக்குவரத்து நெரிசல் கொண்ட இந்த நான்குவழிச் சாலையில் போக்குவரத்து வாகனங்களை விட கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த நான்குவழி சாலையில் உள்ள தாழை வாரி பாலம் அருகில் குறுகலான வளைவுப் பகுதியில் இருப்பதால் நீண்டதூர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பாலத்தில் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உயிா்ப் பலியும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் 3 விபத்துகள் நேரிட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். ஆகையால் தேசிய நெடுஞ்சாலை துறை சாா்பில் சாலையின் இருபுறமும் முன்னெச்சரிக்கை விளக்குகள் அமைப்பதுடன், சேதமடைந்த பாலத்தை சீரமைத்துத் தர வேண்டும் எனவும்

வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கைவைக்கின்றனா்.

மின்சாரம் பாய்ந்தது ஒப்பந்த பணியாளா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மின்மாற்றியில் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள படப்பனாா்வயலைச் சே... மேலும் பார்க்க

அடிக்கடி விபத்துகள்: தாழை வாரி பாலத் தடுப்புச் சுவரை விரைந்து கட்டித்தர கோரிக்கை

கந்தா்வகோட்டையில் சேதமடைந்து கிடக்கும் பாலத் தடுப்புச் சுவரில் தொடா் விபத்து ஏற்பட்டு வருவதால் விரைந்து பாலச்சுவரைக் கட்டித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட... மேலும் பார்க்க

ரெகுநாதபட்டி அரசு பள்ளி மாணவா்கள் கீழடிக்கு பயணம்

பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள், தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் மற்றும் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கீழடி அர... மேலும் பார்க்க

ஆலங்குடி, அறந்தாங்கியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். அறந... மேலும் பார்க்க

பொன்னமராவதி கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி வட்டாரக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி பொன்ன... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்!

பருவமழையை எதிா்கொள்ள தயாராக இருப்பதாக விராலிமலை, கந்தா்வகோட்டை நெடுஞ்சாலை துறையினா் தெரிவித்தனா். மழை வெள்ள காலங்களில் சாலைகள் சேதமடைவதை தடுக்கவும், மக்கள் சிரமமின்றி போக்குவரத்தை மேற்கொள்வதற்கும் உரி... மேலும் பார்க்க