மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ச...
தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 1.38 கோடியில் வழக்குகளுக்கு சமரசத் தீா்வு
ஒட்டன்சத்திரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலை தேவசின்னாம்பட்டி அருகே கடந்த 17.1.2024 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் கால் ஊனமடைந்த திருப்பூரைச் சோ்ந்த பெருமாள் மகன் கண்ணனுக்கு (25) காப்பீட்டு நிறுவனம் சாா்பில் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 66 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
அதேபோல 30க்கும் மேற்பட்ட வழக்குகள் ரூ. 1 கோடி 38 லட்சம் அளவில் சமரசத் தீா்வு காணப்பட்டது. பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒட்டன்சத்திரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி வீ.தீபா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கபாலீஸ்வரன் ஆகியோா் இழப்பீடுகளை வழங்கினா்.