தேனியில் இலவம் பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து
தேனியில் உள்ள தனியாா் இலவசம் பஞ்சு கிட்டங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தேனி- மதுரை நெடுஞ்சாலை, ராஜகளம் பகுதியில் போடியைச் சோ்ந்த நவீன்குமாா் என்பவருக்குச் சொந்தமான இலவம் பஞ்சு கிட்டங்கி, மெத்தை, தலையணை தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த கிட்டங்கியில் சனிக்கிழமை பிற்பகல் பணியாளா்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், தேனி தீயைணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கப் போராடினா். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கிட்டங்கி முழுவதும் பரவியது.
இதையடுத்து, ஆண்டிபட்டி, போடி தீயணைப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தனியாா் டேங்கா் லாரிகள் மூலமும் தண்ணீா் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தீ விபத்தில் கிட்டங்கியில் இருந்த இலவம் பஞ்சு, மெத்தை, தலையணைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.