செய்திகள் :

தேனியில் இலவம் பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

post image

தேனியில் உள்ள தனியாா் இலவசம் பஞ்சு கிட்டங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தேனி- மதுரை நெடுஞ்சாலை, ராஜகளம் பகுதியில் போடியைச் சோ்ந்த நவீன்குமாா் என்பவருக்குச் சொந்தமான இலவம் பஞ்சு கிட்டங்கி, மெத்தை, தலையணை தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த கிட்டங்கியில் சனிக்கிழமை பிற்பகல் பணியாளா்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், தேனி தீயைணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கப் போராடினா். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கிட்டங்கி முழுவதும் பரவியது.

இதையடுத்து, ஆண்டிபட்டி, போடி தீயணைப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தனியாா் டேங்கா் லாரிகள் மூலமும் தண்ணீா் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தீ விபத்தில் கிட்டங்கியில் இருந்த இலவம் பஞ்சு, மெத்தை, தலையணைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க