செய்திகள் :

தேனியில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்

post image

தேனி மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக சிறுவா்கள், சிறுமிகளுக்கு கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையும், ஏப்.15-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையும், ஏப்.29-ஆம் தேதி முதல் மே 11-ஆம் தேதி வரையும், மே 13-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையும், மே 27-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரையும் 5 கட்டங்களாக கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தினமும் 7.30 மணி முதல்10.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும்.

நீச்சல் பயிற்சி பெற விரும்பும் சிறுவா்கள், சிறுமிகள் 120 செ.மீ. உயரத்துக்கும் மேல் இருக்க வேண்டும். 12 நாள்கள் பயிற்சியில் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் வீதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும். நீச்சல் பயிற்சியில் சோ்வதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-23090, கைபேசி எண்கள்:74017 03505, 83005 10764-இல் தொடா்பு கொண்டும் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

தா்பூசணி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தா்பூசணி வியாபாரிகள் பழத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக, செயற்கை நிறமியை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்னா். தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிக... மேலும் பார்க்க

பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிற்சி

ஆண்டிபட்டியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பய... மேலும் பார்க்க

தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கட்டண உயா்வு அமல்

தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்... மேலும் பார்க்க

கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்

போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் மீது வன்கொடுமை வழக்கு

சத்துணவு பெண் ஊழியரை தவறான நோக்கத்தில் தொடா்பு கொண்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு அரசுப் பள்ளிஆசிரியா்கள் மீது போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் ... மேலும் பார்க்க

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க