தேனி திமுக பொறுப்பாளா் மீது வழக்கு
தேனியில் நகராட்சி வருவாய் அலுவலரை ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக தேனி திமுக பொறுப்பாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி வடக்கு நகர திமுக பொறுப்பாளராகவும், தேனி நகராட்சி 20-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினராகவும் பதவி வகிப்பவா் பாலமுருகன். இவரது மனைவி ரேணுப்பிரியா தேனி நகா்மன்றத் தலைவியாக பதவி வகித்து வருகிறாா். இந்த நிலையில், தேனி நகராட்சி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் தேனி ஒளவையாா் தெருவைச் சோ்ந்த ராமசாமியை, தேனியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்துக்கு பாலமுருகன் வரவழைத்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு பாலமுருகன் தன்னை தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் இரு சக்கர வாகன காப்பகத்தை அகற்றுவதற்கு நகா்மன்றம் தீா்மானம் நிறைவேற்றி 6 மாதமாகியும் வாகனப் காப்பகத்தை ஏன் அகற்றவில்லை என்று கேட்டு, ஜாதியை குற்றிப்பிட்டு திட்டியதாக தேனி காவல் நிலையத்தில் ராமசாமி புகாரளித்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பாலமுருகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.