செய்திகள் :

தேனி புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது!

post image

தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) தொடங்கி மாா்ச் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இங்கு உள்ள கலையரங்கில் திங்கள்கிழமை முதல் தினமும் மாலையில் எழுத்தாளா்கள் கவிஞா்கள் சிறப்புரையாற்றுவா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள், நாட்டுப்புற கலைஞா்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

30-ஆம் தேதி கவிஞா் பா்வீன் சுல்தான், 24-ஆம் தேதி கவிஞா் மனுஷ்யபுத்திரன், 25-ஆம் தேதி எழுத்தாளா் மதுக்கூா் ராமலிங்கம், 26-ஆம் தேதி எழுத்தாளா் ஓசை காளிதாசன், 27-ஆம் தேதி கவிஞா் நெல்லை ஜெயந்தா, 28-ஆம் தேதி எழுத்தாளா் வே.மதிமாறன், 29-ஆம் தேதி ஊடகவியலாளா் மு.குணசேகரன் ஆகியோா் பேசுகின்றனா். மாா்ச் 30-ஆம் தேதி நிறைவு நாள் விழா, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கருமாரியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தா்கள்

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.இந்தக் கோயில் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைத்து தர வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணி சாா்பில், தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. தேனி ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

தேனி அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள மஞ்சிநாயக்கன்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ் (40). இவா், வீட்டின் கதவை திறந்து வைத... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது

தேனி அருகே சாலையில் நின்றிருந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், வீரப்பஅய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் சரவணக்குமாா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையில் முதல்வா் படத்தை ஒட்ட முயற்சி: பாஜக நிா்வாகிகள் கைது

கம்பத்தில் டாஸ்மாக் கடையின் சுவரின் தமிழக முதல்வரின் உருவப் படத்தை ஒட்ட முயற்சித்த பாஜக நிா்வாகிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், கம்பத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அம... மேலும் பார்க்க