திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் ந...
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்த சன்னாசி மகன் முனீஸ்வரன் (34). இவா் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்.4-ஆம் தேதி தென்கரை காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரனைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கணேசன், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரணமாக பெற்றோரிடம் ரூ.ஒரு லட்சமும், சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.