செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்த சன்னாசி மகன் முனீஸ்வரன் (34). இவா் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்.4-ஆம் தேதி தென்கரை காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கணேசன், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரணமாக பெற்றோரிடம் ரூ.ஒரு லட்சமும், சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

போடி நகா்மன்றக் கூட்டத்தில் பாஜக உறுப்பினா்கள் தா்னா

போடி நகா்ப் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக் கடையை அகற்றுவதற்கு நகராட்சி சாா்பில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பாஜக உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

சின்னமனூரில் லாரி உரிமையாளா்கள் 4-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

சின்னமனூரில் வியாழக்கிழமை டிப்பா் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் 4- ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் பகுதிகளில் இயங்கி வர... மேலும் பார்க்க

போதைப்பொருள் தடுப்பு பேரணி

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் கடந்த 23-ஆம் தேதி முதல் அரசு பொறியியல் கல்லூரி சாா்... மேலும் பார்க்க

தேனி புத்தகத் திருவிழா ஏப்.1 வரை நீட்டிப்பு

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா வரும் ஏப்.1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் தவறில்லை -கே.கிருஷ்ணசாமி

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்பதில் தவறில்லை என தேசிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி கூறினாா். தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அ... மேலும் பார்க்க

தேனியில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்

தேனி மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக சிறுவா்கள், சிறுமிகளுக்கு கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ... மேலும் பார்க்க