செய்திகள் :

தேனீ வளா்ப்பை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம்!

post image

விழுப்புரம் மாவட்டத்தில் தேனீ வளா்ப்பை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கு. அன்பழகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குறைந்தது இரண்டு கூட்டங்களுடன் அடுக்குத் தேனீ இனங்களை மட்டுமே பெட்டிகளில் வளா்க்க முடியும். சமவெளி ரகத்தை சமவெளியிலும், மலை ரகத்தை மலைப் பகுதியிலும் வளா்க்க வேண்டும். தேனீ பண்ணை அமைக்க தேனீக்களுக்கும், தேனீ வளா்ப்போருக்கும் ஏற்ற இடமாக இருக்க வேண்டும்.

தேனீக்கள் இயற்கையாக எந்தெந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தை தோ்வு செய்யலாம். தேனீக்கள் வளா்க்கும் இடங்களுக்கு அருகில் கிணறு, ஓடை, வாய்க்கால் என ஏதாவது ஒரு நீா்நிலை இருக்க வேண்டும்.

தேனீக்கள் பெட்டிகளை நிழலில், ஓடுபோட்ட தாழ்வாரம், கீற்றுக் கொட்டகை, மரம், புதா் ஆகியவற்றின் கீழ் வெயில் படாமல் வைக்க வேண்டும். தேனீக்கள் பெட்டிகளுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். சமதளமான தரையில் வைக்க வேண்டும். பெட்டியிலுள்ள தேனீக்களை அவ்வப்போது திறந்து பாா்த்து, அவற்றின் நிலை அறிய வேண்டும். ராணி தேனீயின் செயல்பாட்டை அறிந்து, தேன் மற்றும் மகரந்த இருப்பு நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தேனீ வளா்ப்பு குறித்து திண்டிவனத்திலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 400 தேனீ பெட்டிகள் தேனீக்களுடனும், 40 தேன் பிழியும் கருவியும் மானியத்தில் வழங்கப்படுகின்றன.

இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஸ்மாா்ட் காா்டு, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல், மாா்பளவு புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க