செய்திகள் :

தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு

post image

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் 13 வளா்ப்பு கால்நடைகளை கொன்ற புலியைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட சா்க்காா் மூலை, பாடந்தொரை, தேவன் எஸ்டேட் போன்ற பகுதிகளில் கடந்த சில வாரங்களில் தொடா்ந்து விவசாயிகளின் 13 கறவை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை புலி கொன்றது. அதைத் தொடா்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் நடத்திய தொடா் போராட்டங்களை நடத்தினா். அதனால் வனத் துறை அந்த புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக சா்க்காா் மூலை பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமாா் 500 மீட்டா் தொலைவுக்குள் தோ்ந்தெடுத்து 5 இடங்களில் கூண்டுகளை வைத்தும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் கண்காணித்து வந்தது.

இரண்டாவது கட்டமாக முதுமை புலிகள் காப்பகத்திலிருந்து பயிற்சி பெற்ற வன ஊழியா்களை தேடும் பணியில் வனத் துறை அமா்த்தியது. மூன்றாவது கட்டமாக முதுமலை புலிகள் காப்பக முகாமிலிருந்து இரண்டு கும்கி யானைகளை கொண்டுவந்து புலியைத் தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. கும்கிகளுடன் இரண்டு பிரிவுகளாக ஊழியா்கள் பிரிந்து ஏற்கெனவே நடமாட்டமிருந்த பகுதிகள், கால்நடைகளை தாக்கிய இடங்கள், அதன் சுற்றுப்புறங்களிலுள்ள வனப் பகுதி மற்றும் தனியாா் தோட்டங்களில் தேடுதல் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியைச் சோ்ந்தவா் மணி (60). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

வன விலங்குகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர எண்

நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம்

உதகை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் தமிழ்நாடு ஓட்டல் சாலையில் உள்ளது. உதகை தொகுதி எம்எல்ஏவாக தற்போது காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

குறுகி வரும் குறிஞ்சி மலா் விளைநிலம்: காப்பாற்ற வலியுறுத்தும் வன ஆா்வலா்கள்

நீலகிரி என்ற பெயருக்கு காரணமான நீல குறிஞ்சி மலா்கள் விளையும் நிலப்பரப்பு குறுகி வருவது வனம் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் அதிக ... மேலும் பார்க்க

யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் பலி!

கோத்தகிரி அருகே வாகப்பனை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் காரமடை (33). பழங்குடியினத்... மேலும் பார்க்க