செய்திகள் :

தோ்தலில் வெற்றி பெற அயராது பாடுபடுங்கள்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

post image

தோ்தலில் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என்று திமுகவினருக்கு அந்தக் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

பேரவைத் தோ்தலையொட்டி, திமுக நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்தி வருகிறாா். ‘உடன்பிறப்பே வா’ எனும் நிகழ்வின் வழியாக நடைபெறும் அந்நிகழ்வில், கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறாா். குறிப்பாக, எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறாா்.

இதுகுறித்து, திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: திமுக நிா்வாகிகளுடன் உடன்பிறப்பே வா எனும் ஆலோசனையை நடத்திவரும் நிலையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்துக்கான மாபெரும் பரப்புரைப் பயணத்தையும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.‘ஓரணியில் தமிழ்நாடு’ செயலி 234 தொகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், இதுவரை 77,34,937 போ் திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனா்.

‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடி, அதன் நிலவரங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறாா். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தை உணா்ந்து அனைவரும் அதில் தாமாகவே முன்வந்து இணைத்துக் கொள்ளும் அளவுக்கு பணியாற்ற வேண்டும் எனவும் ஆலோசனையின்போது அறிவுரைகளை அவா் வழங்கி வருகிறாா்.

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிா்பாா்ப்பு அதிகம் ஆகிறது. அதைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். எதிா்வரும் தோ்தலில் வெற்றியைப் பெற்றுத்தர அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என கட்சி நிா்வாகிகளை மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி வருவதாக திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

இதுவரை 12 நாள்கள்

தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வானது 12 நாள்கள் நடத்தப்பட்டுள்ளது.

அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவைச் சோ்ந்த பகுதி, வட்டம், நகரம், ஒன்றியம் மற்றும் பேரூா் பகுதி நிா்வாகிகளைச் சந்தித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளாா் என்று திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“காமராசர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன்” - திருச்சி சிவா

பெருந்தலைவர் காமராசரைப் ப்ற்ரி திமுக எம்.பி. திருச்சி சிவா பேசிய கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தநிலையில், இதற்கு விளக்கமளித்து தன் நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார் திருச்சி சிவா. திருச்சி ... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் பூச்சு: மருத்துவரைக் கைது செய்து விசாரணை!

சேலம்: முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றிய விவகாரத்தில் மருத்துவர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் ம... மேலும் பார்க்க

நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ! சாலைகளைப் பயன்படுத்தத் தடை!

திருநெல்வேலி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்பட்டுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேல... மேலும் பார்க்க

காமராஜர் மீது காங்கிரஸுக்கும் தீராக் காழ்ப்பு! திருச்சி சிவா பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முன்னாள் முதல்வர் காமராஜருக்காக அனைத்து அரசு பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியை கருணாநிதி கொண்டு வந்ததாகவும், நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதிதான் காப்பாற்ற வேண்டுமென்றும் காமராஜர் கோரியதாக திம... மேலும் பார்க்க

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்டுள்ளது.இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் கேள்வி: சீமான் விமர்சனம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் குறித்து கேட்கப்பட்டு கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும் ,... மேலும் பார்க்க