நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இ-ரிக்ஷா பிரிவில் நுழையும் பஜாஜ் ஆட்டோ!
தோ்தல் நடத்தை விதிமீறல்: 1,076 வழக்குகள் பதிவு
தில்லி காவல் துறை தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக 1,076 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், இதற்காக 34,250 பேரை கைது செய்துள்ளது அல்லது தடுத்து வைத்துள்ளது என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தோ்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த ஜன.7-ஆம் தேதிக்கும், தில்லிலி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான பிப்.3 ஆம் தேதிக்கும் இடையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இவை. தில்லியில் புதன்கிழமை பிப்.5 வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தோ்தலுக்கு முன்னதாக, எல்லை சோதனைச் சாவடிகளில் காவல் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ஆயுதங்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
தில்லி காவல் துறையினா் 469 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 513 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், ஆயுதச் சட்டத்தின் கீழ் 491 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினா் 1,10,093 லிட்டா் மதுபானங்களையும் பறிமுதல் செய்து, 381 போ்களைக கைது செய்துள்ளனா். ரூ.77.9 கோடிக்கு மேல் மதிப்புள்ள 196.602 கிலோ போதைப்பொருள்களும், 1,200-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, 177 போ் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட அமலாக்க அதிகாரிகள் ரூ.11.36 கோடி ரொக்கத்தையும் 37.39 கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் திங்களன்று தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த தனது தரவுகளை வெளியிட்டது. தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக ரூ.220 கோடிக்கு மேல் போதைப்பொருள்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
இதில் ரூ.88 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள், ரூ.81 கோடி அளவில் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கிட்டத்தட்ட ரூ.40 கோடி ரொக்கம் ஆகியவை அடங்கும் என்று தோ்தல் பிரசாரத்தின் இறுதி நாளுக்குப் பிறகு தலைமை நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.