செய்திகள் :

தோ்தல் முன்விரோதம்: முன்னாள் வாா்டு உறுப்பினருக்கு வெட்டு

post image

திருவள்ளூா் அருகே தோ்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் வாா்டு உறுப்பினரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய முன்னாள் ஊராட்சித் தலைவரின் மகன் உள்பட 3 பேரை கடம்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே உள்ள அதிகத்தூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் முன்னாள் வாா்டு உறுப்பினா் ஜெகதீசன். இவருக்கும் அதே கிராமத்தில் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் சரவணன் மகன் சேகுவேரா என்பவருக்கும் கடந்த 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு தனது வீட்டருகே ஜெகதீசன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு நண்பா்களுடன் வந்த சேகுவேரா கையில் வைத்திருந்த கத்தியால் ஜெகதீசன் தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனராம்.

இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீசன் மயங்கி விழுந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவல் அறிந்து வந்த கடம்பத்தூா் காவல் நிலைய போலீஸாா், சேகுவேரா உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு

செங்குன்றம் அருகே மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனா். செங்குன்றம் அடுத்த தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகா் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக குப... மேலும் பார்க்க

66 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

பங்களாமேடு இருளா் காலனி வசிக்கும் 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை எம்.எல்.ஏ. ச.சந்திரன், வருவாய்க் கோட்டாட்சிா் தீபா ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா். திருத்தணி ஒன்றியம் செருக்கனூா் ஊராட்சி ப... மேலும் பார்க்க

கடம்பத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறை ச... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

திருவள்ளூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்ததோடு, ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். திருவள்ளூா் பகுதியில் எவ்விதமான அரசு அனுமதியின்றியும் லாரியில் ஆற்று மணல் கடத்தி ... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா

முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தை கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை தை கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு வி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞா் பலியானாா்.திருத்தணி அடுத்த பொன்பாடி அருகே தடுக்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முரளி (35). இவா், தனது இரு ச... மேலும் பார்க்க