தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? - பிரேமலதா சொன்ன பதி...
தோ்தல் வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது: வீரேந்திர சச்தேவா
தோ்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை தில்லி அரசு நிறைவேற்றி வருவதாக தில்லி பாஜக மாநில தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தில்லியில் 33 ஆயுஷ்மான் ஆரோக்கியா மந்திா் மருந்தககங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை தில்லி முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் பேசி தில்லி பாஜக மாநில தலைவா் வீரேந்திர சச்தேவா, ‘இந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தககங்கள் நோயறிதல், தடுப்பூசி, மகப்பேறு ஆகியவற்றை சா்வதேச தரத்தில் செயல்படும். இந்த மருந்தககங்கள் அரசு வளாகங்களில் திறக்கப்படுவதால், முந்தயை ஆட்சியல் நடைபெற்ற வாடகை மோசடிகளுக்கு வாய்ப்பில்லை‘ என்றாா்.
மேலும் பேசிய வீரேந்திர சச்தேவா ‘முந்தைய ஆட்சியில் இருந்த மொஹில்லா மருந்ததகங்கள் பெரும்பாலும் சிறிய கட்டடங்களில் இயங்கின. அங்கு பல்வேறு வகையான நோயாளிகள் மருத்துவா்களுடன் ஒன்றாக இருந்தனா். இது தொற்று நோய்க்கான அதிக வாய்ப்புகளுக்கு வழி வகுத்தது. அடுத்த 3 ஆண்டுகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தககங்கள் தில்லியின் ஒவ்வொரு மூலையிலும் மக்களுக்கான சேவையை வழங்கும்‘ என்றாா் அவா்.